பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

93

கலத்தில் நீரேந்தி வருகிறாள்.

“சாமளி, மன்னர் இரவு வந்தாரா?...”

அவள்... “இல்லையே?” என்று கூறுமுன் அவந்திகா விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

“நீ கண்டாயா? நீ உன் புருசனைப் பார்க்க ஓடி விட்டாய். அவன் எந்தப் பொம்புள பின் ஒடுகிறானோ என்ற கவலையில், இங்கே மகாராணி இல்லை என்ற நினைப்பில் நீ எதையும் கவனித்திருக்க மாட்டாய். நான் உன்னையே முதலில் நேற்று வந்ததில் இருந்து பார்க்கவில்லை. இப்போது மன்னர் வந்தாரா என்று கேட்டால் இல்லை என்று பார்த்தாற் போல் சொல்கிறாய்! மன்னர் ராத்திரி வந்தார். அருகில் வந்து பார்த்தார். ஒசைப் படாமல் நின்றார். என்னிடம் விசாரித்தார். நலமாகத்தானே இருக்கிறாள் என்று கேட்டார். நான் சொன்னேன். துங்கட்டும், எழுப்ப வேண்டாம், காலையில் பார்க்கலாம் என்று சொல்லி விட்டுப் போனார். இத்தனை நடந்து இருக்கிறது, இவள் மன்னர் வரவில்லை என்கிறாள். இங்கு தீபச்சுடர் தட்டிக் கரிந்து போனாலும் அதைத் துாண்டி எண்ணெய்விட நாதி இல்லை. பேசுகிறார்கள் கூடிக் கூடி!”

பூமகளுக்கு அவந்திகாவின் பேச்சு ஏன் இயல்பாகத் தோன்றவில்லை?

சாமளி இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்கலாகாது?

ஊடே கிளியைப் பூனை கவ்வும் தோற்றம் சிந்தனையில் வேலாய்ப்பாய்கிறது.தத்தம்மா, என் தத்தம்மா, சத்தியம், அதையா பூனை கவ்விவிட்டது? திடீரென்று நினைவுவந்தாற் போல், “அந்தப் பணிப்பெண்ணைக் கூட்டிவா என்று சொன்னேனே, அவந்திகா? நினைவிருக்கிறதா? கூட்டிவாயேன்!” என்று மெல்லிய குரலில் நினைவூட்டுகிறாள்.

“யார் தேவி? பூவாடை நெய்யும் ஒண்ரைக்கண் பிந்துவா?...” அவந்திகாவும் வேண்டுமென்றே தாண்டிச் செல்வதாகப் படுகிறது.