பாவேந்தர் பாரதிதாசனார் 73
நிலை ஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்!
பலர் புகழ் நின்ற பச்சைப்
பசுங்கிளி ! வாராய்! வாராய்!'
—அழகின் சிரிப்பு: கிளி:1
கிளியின் இருவகைப் பேச்சினைக் குறிப்பிடும் போது, 'கனியிருப்பக் காய் கவரும்' மனிதர் மடைமையினைக் கவிஞர் சாடுகின்றார்:
'காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!
—அழகின் சிரிப்பு: கிளி:7
சிற்றுார்க்கும் பேரூர்க்குமுள்ள வேறுபாட்டினைக் கவிஞர் பின் வருமாறு கூறுவார்:
'இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்றுாரில் காண ஏலும்:
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்;
முயற்சியும் முழுது ழைப்பும்
சிற்றுாரில் காணு கின்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!'
—அழகின் சிரிப்பு: பட்டணம்:8
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சியின்மேல் கவிஞன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுதல் 'தற்குறிப்பேற்ற