98 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் 1946-47 ஆம் ஆண்டில், டி. பிரகாசம் முதலமைச்சராக இருந்தபோது, பார்ப்பனர்க்குச் சலுகை அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், 1928 முதல் நடைமுறையில் இருந்து வந்த, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். மருத்துவக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், சேர்க்கப்படும் மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களைத் தகுதி திறமை அடிப்படையிலேயே சேர்க்கவேண்டும் என்று டி. பிரகாசத்தின் அரசு ஆணை பிறப்பித்தது. எல்லா மாணவர்களையும் தகுதியின் அடிப்படை யிலேயே சேர்க்கவேண்டும் என்று கூறினால் பொது மக்களின் பெரும் எதிர்ப்புக் கிளம்பும் என்று அஞ்சியே, முதலில் 20 சதவீத மாணவர்களைத் தகுதி திறமையின் அடிப்படையில் சேர்க்கவேண்டும் என்ற ஆணையைத் டி. பிரகாசம் பிறப்பித்தார். 1946 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 387 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். வகுப்புவாரி ஒதுக்கீட்டின் படி சேர்த்திருந்தால், மொத்தம் 56 பார்ப்பன மாணவர் களுக்குத்தான் இடங்கள் கிடைத்திருக்கும். ஆனால் டி. பிரகாசம் வெளியிட்ட புதிய ஆணையின் காரணமாக 96 பார்ப்பன மாணவர்களுக்கு இடங்கள் கிடைத்தன. தகுதி திறமையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்ற ஆணையின் காரணமாக 40 பார்ப்பன மாணவர்களுக்கு அதிகமாக டங்கள் கிடைத்தன.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
