பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் யெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு, மனநிறைவோடு வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், முப்புறமும் கடலும், எப்புறமும் வளங்களும், நீர் வளமும், நிலவளமும், கனிவளமும், காட்டுவளமும், நாகரிக வளமும், பண்பாட்டு வளமும் கொண்டு விளங்கும் நமது நாடு மட்டும், வறுமையிலும், ஏழ்மையிலும் மூழ்கி, வாடி வதங்கிக் கொண்டிருக்கக் காண்கிறோம். இதற்குக் காரணம் நம்மவர் ஆட்சி, நல்லவர் ஆட்சி, வல்லவர் ஆட்சி இங்கு இல்லாதது தான். ப புதைந்து கிடக்கும் கனிச்செல்வங்கள் தோண்டி எடுக்கப் படவேண்டும்; புதிய புதிய பெரிய தொழிற் சாலைகள் தோற்றம்பெறவேண்டும்; பொருளாதார நிலை எல்லாத் துறைகளிலும் ஓங்கவேண்டும், வறுமை நீங்கவேண்டும்; வாட்டம் தொலைய வேண்டும்; ஏழை எளிய மக்களின் வாழ்வு எல்லா வகையிலும் வளரவேண்டும்; இவையெல்லா வற்றையும் நிறைவேற்றிவைக்க நாட்டில் நல்லாட்சி - நம்மவர் ஆட்சி மலரவேண்டும்! வரப்போகும் பொதுத் தேர்தலின்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் பங்கை உரிய முறையில் செலுத்தினால், வெற்றி கிட்டுவது உறுதி! தேர்தல் பொறுப்புக்களை ஏற்பீர்! கடமையைக் கட்டுப்பாட்டோடு செய்ய வாரீர்! பொதுமக்களின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவீர்! அவர்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் ஈட்டுவீர்! வென்று வாகைசூட வாரீர்!" அறிஞர் அண்ணா அவர்கள் இறுதியில் பேசும்போது, "சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நின்று, தேர்தலில் ஒருமுகமாகப் போட்டியிடப் பெருந்தன்மையோடு