பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அவர், 1971ஆம் ஆண்டு அமைந்த அமைச்சரவையில், தாமும் பங்குபெறவேண்டும் என்றும், கலைத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கத் தம்மால் இயலும் என்றும் கூறினார். அப்பொழுது முதலமைச்சர் பொறுப்பை ஏற்க இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், "எம்.ஜி.ஆர். திரைப்பட நடிப்பை விட்டுவிட்டு வந்தால், அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே அமைச்சர் பொறுப்பை ஏற்றிருப்பது என்பது சட்ட விதிமுறைப்படி பொருந்திவராது" என்று கூறினார். புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். திரைப்பட உலகில் புகழோடும், பெருமையோடும் முதல் இடத்தில் இருந்து வந்ததால், அந்தத்துறையை விட்டுவிட்டு அமைச்சர் பதவிக்குவர அவர் விரும்பவில்லை. என்றாலும், அவர் கலைஞர் கருணாநிதியின் போக்கிலே மனவருத்தம் கொண்டிருந்தார். 1971 பொதுத் தேர்தலின்போது, கழக வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுக்கு எனக் கொடுக்கப்பட்ட தொகைகள், ஒரு சிலர்க்கு அதிகமாகவும், வேறு சிலர்க்குக் குறைவாகவும் ருந்தன என்ற புகார்கள் பொருளாளர் எம்.ஜி.ஆரிடம் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் வரவு செலவு பற்றிய கணக்கு விவரங்கள் தமக்குத் தெரியப்படுத் தப்படவேண்டும் என்று, கழகத் தலைவர் கலைஞரிடம் கேட்டார். இதற்கு முறையான விடையைக் கலைஞர் எம்.ஜி.ஆருக்கு அளிக்கவில்லை. தேர்தல் பற்றிய வரவு செலவுக் கணக்குகளையெல்லாம் கேட்கக்கூடாது என்ற விதத்தில், கலைஞர் கருணாநிதியின் பதில்கள் அமைந்திருந் தன. 'கழகப்பொருளாளர் கழகக் கணக்குகளைப் பற்றிக் -