68
விஜயலக்ஷ்மி பண்டிட்
இச்செய்தி கேட்டு நேருவும் சகோதரிகளும் அளவிலாத் துயரம் அனுபவித்தது ஆச்சர்யம் இல்லைதான்.
சிறையில் பலதரப்பட்ட குற்றவாளிகள் அடைபட்டுக் கிடந்தனர். ரகம்ரகமான பெண்கள் தண்டனைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் அவர்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினாார்கள். அவர்களது துயரக் கதைகளைப் பொறுமையுடன் கேட்டு, ஆதரவான வார்த்தைகள் கூறினார்கள்.குற்றவாளிகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தும் பெருமூச்சு எறிந்தார்கள்.
ஒரு வருஷ தண்டனை காலம் பூர்த்தியானதும் நேரு சகோதரிகள் விடுதலை அடைந்தனர்.விடுதலை கிட்டியதை எண்ணி அவர்கள் குதுர்கலம் பெற்றாலும், அந்நாள் வரை அன்புடன் பழகிய இதர கைதிகளைப் பிரிந்து செல்வதில் அவர்களுக்கு வருத்தமே ஏற்பட்டது.வறுமை,அறியாமை, சமூகச் சூழ்நிலை காரணமாகவும் சந்தர்ப்பங்கள் துாண்டி விட்ட உணர்ச்சிக் கொதிப்புகளினாலும் ஏதேதோ குற்றங்கள் செய்து விட்டு, கடுமையான தண்டனை பெற்று சிறையினுள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அணு அணுவாகக் கருக்கிக் கொண்டிருக்கும் அபலைகளுக்காக, சகோதரிகள் கண்கலங்கினார்கள். ஏற்ற ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வெளியேறினார்கள்.
லக்ஷ்மணபுரியிலேயே அவ்விருவரையும் விடுதலை செய்யவில்லை. சிறைத்தலைவியின் கண்காணிப்புடன்