பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

விஜயலக்ஷ்மி பண்டிட்


பூனா நகரில் தங்கியிருந்த நாட்களில் நேரு சகோதரிகள் அடிக்கடி ஏரவாடா சிறைக்குப் போய் அங்கிருந்த காாந்திஜியைக் கண்டு பேசிப் பயனடைந்தார்கள்.

பிறகு இருவரும் குழந்தைகளுடன் பம்பாய் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குதான் கிருஷ்ணா ராஜா ஹத்திசிங்கைக் கண்டு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருக்கும் காதல் வளர்ந்தது.

ராஜாவை மணந்து கொள்வதாக உறுதி அளித்து விட்டாள் கிருஷ்ணா. இவ்விஷயத்தை சகோதரியிடம் மட்டுமே அறிவித்தாள் அவள். விஜயலக்ஷ்மி அண்ணா நேருவிடம் சமயமறிந்து பிரச்னையை எடுத்துச் சொன்னாள்.ஜவாஹர் ராஜாவைக் கண்டு பேசியும் காந்திஜீயின் ஆலோசனைப் பெற்றும்், தங்கையின் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

1933 அக்டோபர் 20-ம் நாள் ,ஆனந்த பவன'த்தில் கிருஷ்ணாவுக்கும் ராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ராஜாவின் முழுப் பெயர் குணோத்தம ஹத்திசிங் என்பதாம். பாரிஸ்டர் தொழில் பயின்றவர். அரசியல் பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தது உண்டு. பட்டம் பதவி புகழ் முதலியவைகளில் ஆசை கொள்ளாமல், பின்னணியில் நின்று தன்னால் இயன்ற அளவு நாட்டுப் பணி புரிவதே அவரது கொள்கையாம்.