பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போாசிரியர் சுப்பு ரெட்டியார் அவர்கள் இந்த ஐந்து நூல்களையும் அறிமுகப்படுத்தும்போது வரன்முறையாக நூலின் பெயர், நூலின் பாங்கு நூலாசிரியரின் பெயர், நூலின் அமைப்பு முறை, அவ்வமைப்பு முறையில் உள்ள புதுமைகள், அந்நூலின் பாடல்கள், கம்பனையும் திவ்வியப் பிரபந்த ஆழ்வார்களின் சாயல்களைக் கொண்டிருக்கும் பாங்குகள் என்பன போன்ற பல செய்திகளையும் கொடுத்துள்ளார்.

ஜந்து நூல்களில் உள்ள அழகான பாடல்களையும் அறிமுகப்படுத்துவதோடு சில பாடல்கள் உரைநடைப் போக்கையே கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுவது இவர்தம் நடுநிலையான அறிமுகமாகவே உள்ளது.

செவ்வைச் சூடுவார் பாகவதமான 'இதிகாச பாகவதத்திற்கும்', நெல்லி நகர் அருளாளதாசர் இயற்றிய ‘புராண பாகவதத்திற்கும்' உள்ள ஓப்பீடுகள் மிக மிக அருமையாக உள்ளன. இரண்டிற்கும் கருப்பொருள் ஒன்றே எனினும் கட்டமைப்புகளில், கவிதைப் புனைவுகளில் தத்துவ தரிசனப் பாங்குகளில் உள்ள செய்திகளை கவும் அழ்காகச் சுட்டிக் காட்டுகிறார்.

திருக்குருகை மான்யம்', 'கூடற்புராணம்' இரண்டிற்கும் உள்ள குறை நிறைகளையும் தெளிவாக்குகிறார். அடைமொழிகளே இல்லாமல் மரங்களின் பெயர்களைச் சுருக்கிக் கூறும் திருக்குருகைப் பெருமான் கவிராயரின் புலமையை வியந்து போற்றுகிறார்.

'கூடற்புராணத்தில்' வரும் நரசிங்கரைப் பற்றிய செய்தி அரிய செய்தியாகும். நாசிங்கத்தின் உக்கிரம் தணியவில்லை. தேவர்கள் சரப மூர்த்தியை அனுப்பி நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்கச் செய்கிறார்கள். சரபத்தைக் கண்ட நரசிம்மர் அதை வென்று தானே சாந்தம் அடைகிறார் என்பதும் அரிய செய்தி.

'இரு சமய விளக்கமோ' வைணவம், சைவம் என்னும் இரு சமயங்களின் கொள்கைகள் பற்றியது. சைவத்தைவிட வைணவமே சிறந்தது என்று பேசுவது. பட்டி மன்றம் போல் அமைந்தது இரு பெண்களால் பேசப்படுவதாய் அமைந்துள்ளது. சைவ சமயக் கொள்கைகளைக் கண்டிக்கும் ஒரு விசித்திரமான நூல் என்று குறிப்பிட்டுள்ளது சரியான ஆய்வு முடிவாகும்.

-viii-