பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இருசமயவிளக்கம்




வல்லன்ன கொங்கை வனமாலையும்
ஆக வாயில்
பல்லென்னு முல்லைகிரை கொண்டொரு
பாவை சென்றாள்.

இவள்தான் ஆரனவல்லி, திருமால் அடியவள்.

வில்லார் நுதலில் திரிபுண்டர
வெள்ளை நீறும்
அல்லார் குழல்மேல் அணிகொன்
றையும் அக்குமாலை
புல்லார் வளர்பொன் முலையும்
பொலிவாக இன்பச்
செல்லார் அமுதன் னவள்ஒர்தனித்
தோகை போனாள்.

இவள்தான் ஆகமவல்லி, சிவன் அடியவள்.

இம்மான் அனையார் இருவோர்களும்
மேலி யான்முன்
அம்மாள் அரனைப் புகழ்கின்றவர்
ஆக நாட்டும்
செம்மா தளைநேர் நகைஆர
ணச்செல்வ மாதும்
மைம்மா முகில்நேர் குழல்ஆகம
வல்லி ஆகும்.
இப்பாடலில் இருவரும் சொல்லப் பெறுகின்றனர்.

போகும்போது ஆரணி (வேதவதி நதி தீர்த்தத்தில் நீராடிக் கரையேறி இருவரும் தங்கள் தங்கள் தெய்வத்தைத் துதிக்கின்றனர். ஆகமவல்லி நம முக்கணனே நமவே என ஐந்து பாடல்கள் பாடுகின்றாள்.

95