பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்



நான்காவது வேத பரமார்த்த காண்டம் என்பது. இதில் முதலில் பரமார்த்தப் பொருளை விரித்துக் கூறி அப்பொருள் திருமாலே என்று அறுதியிடுகின்றது. இரண்டாவது உபாசனை முழுமையும் திருமாலுக்கே உரியது என்கிறது. மூன்றாவது படைப்பு முழுவதும் திருமாலுக்கே உரியது என்று உரைக்கின்றது. சிவனுக்குப் பல பிறப்புகள் உள்ளன. திருமாலே பிறப்பிலி என்று முடிகிறது. நான்காவது காக்கின்ற திருவருள் திருமாலே என்றும், சர்வ அந்தர்யாமியும், காயத்திரிப் பொருளும் திருமாலே என்றும் சாற்றுகின்றது. ஐந்தாவது அனைத்து வேள்விகளுக்கும் தலைவன் முகுந்தனே என்று முடிக்கிறது. இறுதியான படலம் அனந்த வேதங்களும் நாராயணனே பரம் என்று சாதிப்பதைப் புகலவும், ஆகமவல்லி அம்முடிவுக்கு இசைவு தெரிவிக்கின்றாள் என்பதோடு நூலும் நிறைவு பெறுகின்றது.

உலகத்தில் வாதம் செய்வோரிடம் காணப்பெறும் இயல்புகள் இங்குக் காணப்பெறும். தனக்கு ஏற்றதெல்லாம் சரி, மற்றதெல்லாம் பிழை, அசத்தியம் என்று பிடிவாதம் பிடிப்பது உலக வழக்கு. அந்த வழக்கை இங்கும் காணலாம். வியாசர் காசிச் சேத்திரத்தில் தமது வலக்கையை நீட்டி, நாராயணனே பரம்பொருள் என்று முக்காலும் சத்தியம் என்று சாதித்தார். இதனைப் பிரமாண்ட புராணமும் பாரதமும் மற்றெல்லா நூல்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றன.

வையகத் தெவரும் கண்டுதே றத்தன்
வலக்கையை வானுற நீட்டி
ஐயமற் றிடுசொ லாவது முக்கா
லாவதும் சத்தியம் இதுவே
மெய்யுரைச் சுருதி தன்னிலும் பெரிதாய்
விளங்குசாத் திரங்களும் இல்லை
செய்யகே சவனுக் கதிகமாய் நின்ற
தெய்வமும் இல்லையென் றிசைத்தார்.

என்ற பாடலில் இதனைக் காணலாம். இதனைக் கேட்ட ஆகமவல்லி மெல்ல ஒரு சொல்லை மறுப்பாகச் சொன்னாள். அப்படி சொன்ன

98