பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறப்பிக்கும் முறையில் 'ஸ்ரீஇராமாநுஜர் விருதை'யும் (1996-25,000 வெண் பொற்காககளையும்) வழங்கிச்சிறப்பித்துள்ளன.

அண்மையில் இவர்தம் இயற்றமிழ்ப்பணியைப் பாராட்டித்தமிழ் இயல் இசைநாடகமன்றம் (அரசு) 'கலைமாமணி'’ என்ற விருதினையும் (19993 சவரன் தங்கப்பதக்கம்,இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டிச்சென்னை கோயம்பேடு மனிதநேய வைணவ இயக்கம் 'வைணவ இலக்கிய மாமணி’ என்ற விருதினையும், (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் டிலிட்” (கண்ணியம் என்ற பட்டத்தையும் (1999), காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை 'சேவாரத்னா’ விருதினையும்,(1000 வெண்பொற்காசுகள்1999)இவர்தம் வைணவப்பணியைப் பாராட்டி வழங்கிச்சிறப்பித்துள்ளன. இவர்தம் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் பாராட்டி 'தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் விருது’ (2001-ஓர் இலட்சம் வெண்பொற்காககள்) வழங்கிச் சிறப்பித்தது.

துறையூர் பக்கம் (திருச்சிமாவட்டம் இவர் ஆற்றிய கல்விப்பணியைப் 1941-50 பாராட்டி துறையூர் நகராண்மைக் கழகமும், துறையூர் தமிழ்ச் ங்கமும் (2001) இவரைப்பாராட்டி மகிழ்ந்தது.

இவர்தம் சைவசமய இலக்கியப்பணியைப்பாராட்டிதிருப்பெருந்திரு. சோமசுந்தரர் குருவருள் அருட்பணி மன்றம் (6 சந்தைப் பண்ணை, புது வண்ணாரப்பேட்டை சென்னை-81 தமது 11-வது திருமந்திர முற்றோதல் விழாவில் 'ஆய்வுத்தமிழரசு'’ என்றவிருதும், ரூ.3000/-மும் வழங்கிச்(2001) சிறப்பித்தது.

இவர்தம் தெய்வத்திருக்குறள் பணியைப்பாராட்டிகுருபழநி ஆதீனம் திருக்குறள் பீடம் (குருகுலம், மதுராந்தகம் - 603 306) 'பொதுமறைச் செம்மல்' என்ற விருதும், ரூ.2000மும் வழங்கிச் (2002) சிறப்பித்தது.

இவர்தம் பல்வேறுதுறைத் தமிழ்ப்பணியைப் பாராட்டி சேலம் தமிழ்ச் சங்கம் 'தமிழ் வாகைச் செம்மல்' விருதையும் ரூ. 10,000/-மும் வழங்கி (மார்ச்சு,2003) சிறப்பித்தது.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.

-хvi-