பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறாவின் வைணவ புராணங்கள்


இலங்கு நற்பொருட் டருகுசூழ்
கேசர மெனவே

பிற தீவுகள், கடல், சூரிய மண்டலம், மேலுலகு, கீழுலகு, நரக இயல்புகள் இவை பற்றிய செய்திகளும் காணலாம்.

ஆறாம் கந்தம்: 9 அத்தியாயங்கள் கொண்டது. அசாமிளன், தக்கன், விசுவரூபன் வரலாறுகள் விவரிக்கப் பெற்றுள்ளன. அசாமிளன் கதையில் 'நாராயண'என்ற நாலெழுத்தின் பெருமையைப் பல பாடல்கள் பகர்கின்றன. அவற்றுள்,

பத்திசெய் தாயினும் பகைசெய் தாயினும் வித்தக னொருவன்பேர் விளம்பற் காயினும் ஒத்துநா ராயணா எனஉ ரைப்பரேல் கொத்துவெம் பாதகங் குலைந்து நீங்குமே.

தும்மினும் இருமினும் துயர மிக்குளம் விம்மினும் வீழினும் வினைசெய் போதிலும் அம்மஇன் நாலெழுத் தறைவ ரேல்,அவர்

செம்மலர் மால்பதம் சேர்தல் திண்ணமே.

இவை இரண்டு பாடல்கள். இந்திரன், விசுவரூபன் உபதேசித்த 'நாராயண கவசம்’ தாங்கியமையால் (செயித்தமையால்) அவுணரோடு செய்த போரில் வெற்றி பெற்றான். நாராயண கவசம் ஒரு தனி அத்தியாயம்; கவசம் மட்டும் 26 பாடல்கள். நாராயணனுடைய வடிவங்கள், உறுப்புகள் ஒவ்வொன்றும் காக்க என்று சொல்வது; அடியிற்கண்ட இரண்டு பாடல்கள் எடுத்துக் காட்டுகள்.

புகழ்பெறு மீனுரு வெடுத்த புங்கவன் அகமகிழ் தந்துநீ ரடைந்து காக்க;இச் சகமிசை வாமனன் சார்ந்து காக்க;வேர்

மிகுநிலம் அளந்தமால் விகம்பிற் காக்கவே.

24