பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வை.பு.இ புராண பாகவதம்


இதன் சிறப்புப் பாயிரம்:

எதுகுலத்து வருமுறையோன்
சரிதையைநற் ககன்இசையால்
உதவும்சொலைத் தமிழினால்
உரைத்தவன் திருவரங்கம்
பதியமர்வேத் திரக்கரத்தோன்
பழமறையோன் வரதன்நெல்லிக்
கதிபதியாய் உயர்ந்திடுபே
ரருளாள நாதனரோ (1:53)

என்பது.இப்பாடலால் இவர் திருவரங்கத்தில் வாழ்ந்தவர் என்றும்.இவர் 'வரதன்' எனப்படும் 'அருளாளநாதன்' என்று பெயர் பெறுகின்றார் என்றும் அறிகின்றோம்.

இதற்கு அடுத்த பாடல் நூல் செய்த காலம் கூறுவது. அப்பாடல் இவரை நெல்லிநகர் வரதராசன் என்றும், நூலை 'வாசுதேவ கதை' என்றும் கூறுகின்றது. வாசுதேவன்-வசுதேவர் புதல்வனான கண்ணன். பாகவதம் - பகவானுடைய கதையைச் சொல்வது; பகவான் - கிருட்டின பகவான். இப்பாகவதம் கிருட்டிண பகவான் கதையையே அதிகமாய்ச் சொல்வதால் 'வாசுதேவ கதை' என்று பெயர் பெற்றது; நூலின் பல இடங்களில் இந்நூற்பெயர் 'வாசுதேவ கதை’ என்றே சொல்லப் பெறுகின்றது.

நூலின் இடையிலும் இந்தக் கதையை வடமொழிப் பதினெண்ணாயிரம் சுலோகங்களைத் தமிழில் நெல்லிவரையன் 9,000 விருத்தயாப்பில் சொன்னான் என்று பாடல்பகர்கின்றது (14:5). பாடல் இது:

இதுவலால் உருக்கு மிணிக்குநா ரதன்தான்
இசைத்ததை நைமிசா ரணியத்து
அதிற்சவு னகனே முதல்வரெண் பத்தெண்
ணாயிநர் முனிவர் கேட்பச்
சதுர்மறைச் சூதன் உரைத்திடும் நூல்கலோக
மாம்பதி னெண்ணா யிரமும்
விதிதமிழ் நெல்லி வரதையன் சொன்னான்
விருத்த மொன்யான் சகசிரமே.

35