பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


தயிரியம் எதுநற் சவுரியம் ஏது,
சத்தியம் எது, உண்மை ஏதாம்,
இயல்புறும் இலாபம் எது, வித்தை ஏது,
நலனுறு விபவங்கள் ஏது,
மயர்வறு வயங்குந் திருஏது, வண்மை
விளர்வி தானங்கள் ஏது,
துயர்உறும் இவச்சை ஏது, சுகம் ஏது
துரிதமாய் வருதுக்கம் ஏது (2)

உறவெது, சுவர்க்கம் எரிநர கெய்தாது
உயர்த்திடு மனைஎது, நெறிசேர்
அறிவெது, அழிவில் லாதன எது,நல்
அறிவிலா னெவனெவன் மூர்க்கன்,
வறியவ னெவன்,சம் பன்னனர், வயங்கும்
பண்டித னெவன்,மரு ளகற்றி
அறிவுறும் ஈசன் எவன்,எவன் ஈசன்
இயம்பென அரியருள் செய்வான் (3)

சத்தியம்பரர் சொத்து றத்தலின் னாவைத்
தவிருதல், பிறர்மனை அடையாச்
கத்தமெய் மறையை யறிகுதல் நிலைமை
துலங்கிடும் பொறுமை துன்பங்கள்
எத்தனை வரினும் வெருவுதல் ஒழிதல்
சஞ்சலம் விடைய மற்றிருத்தல்
குத்திர விடமம் விலக்குதல் அவச்சொல்
குறைப்ப தீதுஇமயம் பன்னிரண்டே (4)

தவம்செவம் ஓமம் சவுசநற் சிரத்தை
தானம் ஆசாரிய சேவை

50