இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.புராண பாகவதம்
- இருநிதி யுறுசம் பன்னனாம் அவனே
- இயல்புறு சற்குண முடையோன் (1)
- சரியில்பண் டிதன்இல் வாழ்க்கையில் பாசந்
- தவிர்த்துநற் கதியினை அறிவோன்
- இருநில மதனின் ஈசனா னவனே
- விடையறப் பற்றுதல் தவிர்ந்தோன்
- மருடரு நீசன் சகலபா வத்தின்
- மருவுவோன் இவையெலா ஞான
- உருவமா யமரும் தவவுனர் கெனவே
- உலகளந்த வன்பினா அறைவன் (12)
- இருநிலம் அதனில் இயற்றும்இல் வாழ்க்கை
- உத்தியைக் கடந்திட விலங்கி
- வருதருநா வாயா மனிதர்தஞ் சனன
- மன்னியல் ஓடத்தை விடுப்பான்
- சரியில்சற் குருவாம் சார்ந்திடா நெறியைத்
- தருமனு கூலமாம் பவனன்
- பரமனா கியயா னிவையறித் துய்யாப்
- பாவியர் தம்மைத்தாங் கொடுப்பார் (3)
- துட்டமா வினின்வாய் துலங்கய முறவே
- பிணித்திடும் சூத்திரக் கயிறு
- மட்டினை அறியாததிகமாய் மெட்டி
- அவமென மனத்திடை உணர்ந்தே
- விட்டுமெட் டிடுதல் விரகினைச் சீவன்
- விடையத்தின் கருத்தினை விட்டே
- அட்டைபோல் அவைபற் றுவமுனர்த் திருப்பி
- என்னிடத்து அமைப்பதே அறிவாம் (14)
என்பவையாம்.
53