பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராண பாகவதம்


இருநிதி யுறுசம் பன்னனாம் அவனே
இயல்புறு சற்குண முடையோன் (1)


சரியில்பண் டிதன்இல் வாழ்க்கையில் பாசந்
தவிர்த்துநற் கதியினை அறிவோன்
இருநில மதனின் ஈசனா னவனே
விடையறப் பற்றுதல் தவிர்ந்தோன்
மருடரு நீசன் சகலபா வத்தின்
மருவுவோன் இவையெலா ஞான
உருவமா யமரும் தவவுனர் கெனவே
உலகளந்த வன்பினா அறைவன் (12)


இருநிலம் அதனில் இயற்றும்இல் வாழ்க்கை
உத்தியைக் கடந்திட விலங்கி
வருதருநா வாயா மனிதர்தஞ் சனன
மன்னியல் ஓடத்தை விடுப்பான்
சரியில்சற் குருவாம் சார்ந்திடா நெறியைத்
தருமனு கூலமாம் பவனன்
பரமனா கியயா னிவையறித் துய்யாப்
பாவியர் தம்மைத்தாங் கொடுப்பார் (3)


துட்டமா வினின்வாய் துலங்கய முறவே
பிணித்திடும் சூத்திரக் கயிறு
மட்டினை அறியாததிகமாய் மெட்டி
அவமென மனத்திடை உணர்ந்தே
விட்டுமெட் டிடுதல் விரகினைச் சீவன்
விடையத்தின் கருத்தினை விட்டே
அட்டைபோல் அவைபற் றுவமுனர்த் திருப்பி
என்னிடத்து அமைப்பதே அறிவாம் (14)

என்பவையாம்.

53