பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராண பாகவதம்



இங்ஙனம் கண்ணன் அங்கு நடித்துக் காட்டிய கல்கியவதாரத்தையும் ’கற்கிப்படலம்’ என்ற தனிப்படலமாக இறுதியில் விரித்துரைக்கப் பெறுகின்றது. சனமேசயனுக்குப்பின் தொடர்பாகப் பல தலைமுறை ஆட்சி செய்வோர் வரலாறுகள் வரையப் பெறுகின்றன. இவ்வாறு பெயரும் ஆட்சிக் காலமும் கூறுகின்ற பாடல்கள் 24. பிறகு உலகில் ஆட்சியும் தருமமும் எப்படிக் கீழாகும் என்பதை,

தருமமில் மிலேச்சர் மரபினோர் அநேகர்

தரையினை யாளுவர், தம்மில்

துரிதம் வந்துற வேஅமரிடை அநேகர்

மடிந்திடச் சூத்திரர் முதலாய்,

வருண மற்றுயரும் சங்கர சாதி,

மறுவிலா அனாமிக ராள்வர்

அருமறை புராண சாத்திரம் எவையும்

அருமறை நெறிஅகன் றிடவே,

வருணமும் இலாமல் மறைநெறிப் படியே

மணம்செயும் கருமமும் அகல,

அரிவையர் பலரை யணைந்திட அதுவும்

அறன்எனச் சம்மத மாகிப்

பருவமோ ரெட்டில் சிசுவைமங் கையர்கள்

பயந்திடப் படியிடை நரர்க்குப்

புருடவா யுகசொல் வருடமுப் பதுமாய்த்

தும்பைபோற் குறுகும்பூ மரங்கள்,

தருமமெய் பொறைசற் குணம்அரு ளீகை

தவந்தெய்வம் பேணுதல் எல்லாம்

இருநிலத் தகலக் கதம்வதை முயற்சி

இகழ்ச்சிபொய் வஞ்சனை யதனம்

மருளிவை மலிய மலர்மகள் வாணி

அகன்றிட மதியிலாக் கயவர்
65