பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைப.இ.திருக்குருகை மான்மியம்



அவையடக்கமாகக் கூறும்போது தமிழின் ஐந்திலக் கணங்களையும் குறிப்பிடுகின்றார். சிறப்பான அகப்பொருள் நூலும் மாறன் அலங்காரமாகிய அலங்காரங்களுக்கும் இவர் செய்துள்ளமையும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைத்தே
வழுத்தும் அஞ்சதி காரமும் ஆசறுத் தறியேன்
பழுத்த பாவலர் பாதக மலமென் முடிமேல்
அழுத்துநன்னெறி யாசறக் கற்றதே அறிவேன்

இம்மான்மியத்தைப் பராசர முனிவர் தம் புதல்வர் வியாச முனிவருக்குக் கூற அவர் சுகருக்குச் சொன்னார். இவ்வாறு அந்த வடமொழி நூலை, தமக்கு ஆதிநாத பட்டர் மொழிபெயர்த்துக் கூற, அதனைக் கொண்டு தாம் தமிழில் பாடியதாக இவர் கூறுகிறார் (11) இதைத் தமிழில் கூறிய புலமையால், சடையன் என்ற பெயருடைய தாம் திருக் 'குருகைப் பெருமாள் கவிராயர்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இருக்குமுதற் பனுவலினால் இயற்றமிழ்தேர்
நாவீறன் என்னும் மேன்மை
அருட்புயலைப் புகழ்புலமைத் திருக்குருகைப்
பெருமாள்பே ரன்பு கூறும்
தருக்குலவும் பொழிற்குருகா புரிவணிகன்
சடையனிதைத் தமிழாற் சாற்றித்
திருக்குருகைப் பெருமாள்வண் கவிராசன்
எனப்புனைபேர் சிறந்த தன்றே

என்றது காண்க. அடுத்த பாடல் அரங்கேற்றிய காலம் கொல்லம் 723 (கி.பி. 1548) என்று கூறும்.

அறந்திகழாண் டவைஎழுநூற் றிருபான் மூன்றில்
அணிகிளர்காரத் திகைமாத மெட்டில் வாழ்வு

69