பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.கூடற்புராணம்


பொன்பூத்த புரிசடையும்
பூண்மணிப்பொன் நீண்முடியும்
மின்பூத்த ஒருபாலும்
திருமார்பும் வெண்ணீறும்
மன்பூத்த மான்பதமும்
மானிடமும் வளையுமணிந்து
அன்பூற்றி உலகங்களிக்கு
அவரேஎம் வினைதவிர்ப்பார்.

என்பது காண்க. இங்கு ஆசிரியர் சங்கர நாராயண வடிவத்தைப் பேசுவது காணத்தக்கது.பின்னும்'ஆற்றுப் படலத்தில் முதற் பாடலில் நீலமிடற்றினரைக் குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் கோவிந்தன் தனைக் கூடலழகனை நாவின்பம் பெற நாம் பாடுதுமரோ என்று கூறிவிட்டு அடுத்த பாடலில் நீலமிடற்றினரைப் பாடுகின்றார். ஒன்பதாம் பாடலில் கூறுகின்றார்.

கண்ணன் கீர்த்தியும்
கண்ணுதல் கீர்த்தியும்
விண்ணின் மீனமும்
தேவரும் மேதினிக்
கெண்ண ரெண்ணும் என்
றிட்ட வரைகள் போல்
தண்ணெ னும்மலைத்
தாமரைகள் வீடுமால்.

பெரியாழ்வார் வரலாற்றை இரண்டு பாடல்களால் பாடிய ஆசிரியர் பின்னும் பல இடங்களில் தமக்கு அவரிடமுள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்திக்கொண்டே செல்கின்றார். இவர் புலமை மிக்கவர். சந்தப் பாடல்கள் பாடுவதிலும் யமகம், திரிபு பாடுதலிலும் வல்லவர். சித்திர கவிகள் யாழ் முதலியவற்றைக் குறிப்பிடுவார்.

ஆசிரியர் வாழ்ந்த காலம் பக்தி மிகுந்த காலம். கால உணர்வு இல்லாத காலம். இன்றும்கூட அறிஞர்களிடையே வரலாற்றுணர்வு காணப்படுகின்றதில்லையல்லவா? இறுதியில் இவர் பாடுவது:

79