பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மொட்டையாகத் தோன்றிய பாறை மொட்டாய் நின்றது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்" -என வரலாற்றுக் காலத்தை - பொழுதை வரையறுக்கும் அளவாக எழுந்த கல் மலை, போது + இ = போதி எனப்பட்டது. "போதி,கோ,சிலை,இறும்பு, தடம்" -சேந்தன் திவாகரம். "பொற்றை,நாகம்,சிலை, போதியும் மலைப் பெயர்" -பிங்கலம்.

  -என மலைப்பெயராகப் 'போதி’ என்னும் சொல் குறிக்கப்பட்டது.
  தொடர்ந்து ஆங்காங்கே ஏடாய்த் தோடாய், இதழாய் கற்பாறைகளினிடையே முகடு இன்றி, மூளித்தளமாகப் பொக்கையாய்த் தோன்றிய மேடைப் பாறை தாமரைப் பொகுட்டுபோலத் தோன்றியது. இத்தகைய மலைக்கு,

"பொருப்பொடு குவடு கல்லுப் பொகுட்டொடு திகிரி குன்று"13 -என்றும் "மாதிரம் கல்லே வரையே பொகுட்டு"14-என்றும் பொகுட்டுப் பெயரை நிகண்டுகள் வகுக்கின்றன.

மலைக்குப் 'பூதரம்'என்பது ஒரு பெயர். மலைகளிலும் பூதரம் என்பது இமயத்தையும் மேருவையும் குறிக்கும்.

இதனைத் "தரணி, பூதரம், ஓங்கல்,பிறங்கல்" 15 என்றும் "பூதரம் ஆதிமலை பொன்மலை இமயம்" 15-என்றும் "பூதரம் மணி மலை பொன்மலை மலைமேரு என்ப" -என்றும் நிகண்டுகளில் காணலாம்.

 இவ்வாறு மலையை மலராகக் காணும்போது இரண்டிற்கும் மூலம் ஒன்றுதான் என்பது போன்று இவற்றின் வேர்ச்சொல் உள்ளது. வளப்பத்தைக் குறிக்கும் 'மல்’ என்பதுதான் இரண்டின் வேர்ச்சொல் என்பதும் ஒரு பொருத்தத்தைக் காட்டுகிறது.13 சூடா.தி: இடப்பெயர் 31 15 சேத், தி இடப்பெயர் :38        14 பிங். நி : 495. 18 பிங், தி : 509