பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

17



டிருந்த அனைவரும் பல்வேறு சாக்குகளைச் சொல்லிக்கொண்டே கோட்டைக்குள்ளேயே இரவு நேரத்தைக் கழிக்க முடிவு செய்தனர்.

கோட்டைக்குள் கொந்தளிப்பு: ஜூலை மாதம், 9-ஆம் தேதி, இரவு நேரத்தை வேலூர்க் கோட்டைக்குள்ளேயே கழிப்பதில் வெற்றி கண்ட வீரச்சிப்பாய்களுள் தலை சிறந்தவர் ஜமேதார் ஷேக் காசீம் என்பவரே, கோட்டையின் தலைவாயிலில் அன்றிரவு கண்ணுறங்காது பாதுகாக்கக் கடமைப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி, ஏதும் விளையாது என்னும் இறுமாப்பால், சில சொந்தக் காரணங்களை முன்னிட்டு வீட்டிற்குச் சென்று ஒய்வு கொள்ள விரும்பினான். அவன் கருத்தறிந்த ஜமேதார் ஷேக் காசீம் மெல்ல அவனை அணுகி, நயமாகவும் பணிவாகவும் பேசி, தாமே அவன் கடமையை அன்றிரவு முழுவதும் கண்ணும் கருத்துமாய்ச் செய்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார். வேலூர்ப் புரட்சிக்குக் காரணமாயிருந்த சிப்பாய்களுள் மிக முக்கியமானவரான ஜமேதார் ஷேக் காசிமின் திறமைமிக்க இச்செயல், மறுநாள் மூண்ட புரட்சிக்குப் பெருந்துணை புரிந்தது விந்தையன்று அன்றோ?

1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 9-ஆம் நாள் இரவு எங்கும் ஒரே அமைதி குடி கொண்டது. மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் பல மாதங்களாகக் கனன்றுகொண்டிருந்த புரட்சி எரிமலை குபீரென வெடித்துத் தீக்குழம்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/19&oldid=1137995" இலிருந்து மீள்விக்கப்பட்டது