பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

19



கோட்டையின் முக்கிய இடங்களை எல்லாம் புரட்சியாளர் கைப்பற்றிவிட்டனர். கோட்டைக்குள் இருந்த கோவிலுங்கூட அவர்கள் கையிற் சிக்கியது.

துப்பாக்கிப் போர்: விடியற்காலம் மணி மூன்றிருக்கும். சுதேசி சிப்பாய்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்த லெப்டினன்டு ஈவிங், காப்டன் மாக்லாகலன், தளபதிகள் மிட்சல், பேபி, ஜனேல், சார்ஜன்டு பிராடிலி, லெப்டினன்டு கட்லிப்பு, சர்ஜன் ஜோன்ஸ் என்னும் வெள்ளையர் எண்மரும் ஈவிங் இல்லத்தில் மந்திராலோசனை செய்யக் கூடினர்.கூடிய கால் மணி நேரத்தில் அவர்கள் கூடியிருந்த வீடு புரட்சிவீரர்களால் முற்றுகையிடப்பட்டது; பலமாகத் தாக்கப்பட்டது. தங்கள் இன்னுயிரைக் காக்க அவ்வெள்ளையர்கள் கை ஓயுமட்டும் விடுதலை வீரர்களைச் சுட்டுத் தீர்த்தார்கள். அப்படியும் விடுதலை வீரர்களின் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்கப் பறங்கித் துரைகளால் முடியவில்லை. எனவே, அவர்கள் அண்மையிலிருந்த ஜோன்ஸ் என்பவன் வீட்டில் ஓடி ஒளிந்தார்கள். நிகழ்ச்சிகள் இவ்வாறு ஒரு புறம் நடந்துகொண்டிருக்கப் புரட்சி வீரர்கள் கோட்டைக்கொடி மரத்தையும் கைப்பற்றினார்கள். மேலும், கோட்டைக் கொடிக் கம்பத்தில் ஆடிப்பறந்துகொண்டிருந்த யூனியன் ஜாக்கு அகற்றப்பட்டுத் திப்புவின் திருமகனால் தரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/21&oldid=1138031" இலிருந்து மீள்விக்கப்பட்டது