பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

1806



மேலும், சிப்பாய்கள் மார்பிலே சிலுவை போன்ற ஒரு சின்னத்தைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள். இவ்வுத்தரவுகளைக் கேட்டு முணுமுணுத்தார்கள்-முறையிட்டார்கள்-வெறுப்புக்காட்டினார்கள்-தமிழ்ச்சிப்பாய்கள். தங்கள் சமயப்பற்றையும் சுயமரியாதை உணர்ச்சியையும் ஏலம் கூற விரும்பாத அவர்கள் இதயம், எத்தனையோ முறை பணிந்து வேண்டியும், அறிவற்ற உத்தரவுகளை அகற்ற மறுத்ததுமன்றி, அறம் பிறழா வகையில் உள்ளக் கருத்துக்களே ஒளியாமல் கூறிய வீரர்களை அவமானப்படுத்தியும், கசையடி தந்தும் சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்திய வெள்ளை ஆட்சியைப் பழி வாங்கத் துடித்தது அதன் பயனே வேலூர்ப் புரட்சி.

எவ்வாறு? வேலூர்க் கோட்டையில் பெரிய தொரு புரட்சி மூளப்போகின்றது என்பதற்கான அறிகுறிகள் பல வகையிலும் விளங்கிய வண்ணம் இருந்தன. ஆம்! எரிமலை ஏற்கெனவே புகையத் தொடங்கிவிட்டது. ஆயினும், வெள்ளை அதிகாரிகள் அதை அறியத் தவறிவிட்டார்கள். 1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 10-ஆம் நாள் அதிகாலையில் சுதேசி சிப்பாய்கள் போர்க்கோலம் பூண்டார்கள்; துப்பாக்கிகளை இயக்கினார்கள். கண்ணாடியும் சீப்பும் விற்க வந்து, நயவஞ்சகத்தால் கர்நாடகத்தின் அரசியல் உரிமைகள் அனைத்தையும் கைப்பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/44&oldid=1138887" இலிருந்து மீள்விக்கப்பட்டது