பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வருடம் வெளியிட்ட புரெக்கிள மேஷனை
பாராள் எட்வர்ட் பார்லி மெண்டில்
வாசித்த காலையில் வழங்கிய ரிமிஷன்
இறந்த காலையில் ஈந்த ரிமிஷன்
சிறந்த ஜார்ஜ்தான் ஸிம்மா ஸனத்தில்
ஏறிய காலத் தீந்த ரிமிஷன்
ஆக ழன்றும் கூடிய வருஷம்
ஒன்றரை போக நின்ற நாலரையில்
சிறைவா ஸத்தில் சென்றது நீக்கி
சிலசில நாளே செல்லநின் றமையால்
வள்ளி நாயகனை வரும்படி எழுதினேன்.
அவனும் வந்து தவம்நனி புரிந்தென்
மனைவி மக்கள் மைத்துனன் சொல்லிய
கணபதி அவர்தம் மனைவி மக்கள்
உடனெம் வரவைத் திடமொடு நோக்கி
கண்ணணூர் நகரில் நண்ணிநின் றனர்காண்

 

151