பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

{{left margin|8em|<poem> “பாது” வில் விரும்பிப் பகர்ந்து விடுத்தேன். மாநிலம் கொண்டிட வள்ளியும் உவந்திட திருவள் ளுவரின் தெய்வமா மறையின் பெருவளக் குறள்சில பேணிப் படித்தேன்: நந்தாது விளங்கும் நற்சங்க நூல்களுள் சிந்தா மணியும் சிலப்பதி காரமும் மணிமே கலையும் மற்றுஞ் சிலவும் துணிவோ டெடுத்துத் தொடங்கினேன் முடித்திலேன் தொல்காப் பியமெனும் சொல்லுயர் நூலினை நல்காப் பியமென நான்மனம் கொண்டு முறைமையில் உரையொடு மொழியச்செய்து நிறைவுறக் கேட்க நினைத்துச் சோள வந்தான் "சண்முக வாணனைக் கொண்டேன்: தந்தான் ஒருசில தர்க்கம் புரிந்தே உரையினைக் கேட்டேன்; ஒப்பக் கேட்டும் புரையிலேன் என்றவன் போயினன் தன்னூர்.வள்ளி- சுவாமி நாயகம் சேரன் வந்தான் அரசஞ் சண்முகனார்

40