பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

 கலெக்டரின் கடும் சூழ்ச்சி


இந்த மத்தியில் எமனெனும்
                     லித்சு
தந்தி மூலமாச் சாற்றிப் பற்பல
மதுாஸ் கவர்னரின் மனத்தைத்
                   திருப்பிச்
சதுர மாக ஜனங்களைக்
                   கூட்டியாம்
தூற்றுக் குடியிலும் சொல்லிய
             நெல்லையி னூர்
சாற்றிய பிரசங்கம் தம்மிற்
                      பற்பல
இராஜ சிந்தனை இருப்ப தாகப்
பிராது கொடுக்கப் பெற்றார்
                     அநுமதி.
எங்களில் பத்மனை இணையாது
                        விட்டு
திங்களில் பிராதை சவமீதும் என்
                        மீதும்
கொடுக்கும் படி செய்து
        கொடுத்தனன் வாண்டு.
அடுத்தனர் பொலிஸார் அதனுடன்
                 சிறையினை.
அஞ்சரை மணிக்கியான் அவர்
              தலை கண் டேன்.
நஞ்சினைக் கொணர்ந்தனர்
       நமக்கென உன்னினேன்.
சிறையின் சூப்பரின் டெண்டிது
                      வரையும்
சிறையினின் றும்மைத் தீர்ந்திட
                        ஆர்டர்
வந்திட வில்லை:வந்திடும்
                   காலையில்:
வந்ததும் நும்மிடம் வாங்கியே
                       ஒப்பம்
விடுதலை செய்கிறேன்;
            வீடுபோம்"என்றான்.
கெடுதலை செய்வதே கிட்டிய
                   நெஞ்சொடு.
செவ்வாயில் யாவும் சித்தப்
                  படுத்திப்பின்
செவ்வாய் திறந்து செப்பிய
                  சிறையினன்
"நடந்து நும் வீட்டை
          நண்ணலாம்"என்முன்.
ஈடந்தன வெல்லாம் நான்முன்
                  முகர்ந்ததால்
ஒப்பம் இடற்கியான் யோசிக்க
                   வேண்டும்:
இப்பம் இடற்கெனக் கிஷ்டமிலை"
                    என்றேன்.

98

 

93