பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

                                          61
           பரங் களைதல்.

இதமாக சென் - நல்ல கரங்களைப் பின்னும் செய்; அயலை ஈர்-திய கருமங்களை விட்டு விடு..............

  க-ரை:- விடியற்காலையில் நல்ல உயிர்கள் முதலியவற்றின் பெருக்கத்திற்காகக் கடவுளைத் தொழுத பின்னர், உனக்கு அடிக்கடி எழுகின்ற பாவ நினைவுகளைத் தெரிந்து;அவற்றை மேல் நிலையாதும் புரியாதும் விடுவதாக உனக்கு அருமையான பொருள்களின் மீது ஆணையிட்டு, முதல் நாளில் நீ செய்த கருமங்களை யெல்லாம் நினைத்துப் பார்த்து, அவற்றில் நல்லவை இன்ன தீயவை இன்ன என்று ஆராய்ந்து, நல்லவற்றை மேலும் மேலும் செய்; தீயவற்றை மேல் செய்யாமல் விடு. 

உண்ணுதற்குமுன்னு முறங்குதற்கு முன்றுமெய்யை யுண்ணியலைந்து போற்றி யுணதொழுக்க- மெண்ணிக் கடிந்தவற்றை நீக்கிக் கடியாத செய்யின் முடிந்தனவுள் வேலை முறை.

                                      (சுய) 
 அ-ம்:-(8) உண்ணுதற்கு முன்னும் உறங்கு தற்கு முன்னும் மெய்யை உள் நினைந்து போற்றி, உனது ஒழுக்கத்தை எண்ணி, கடிந்தவற்றை நீக்கிக் கடியாதவற்றைச் செய்யின், உன் வேலை முறை முடிந்தன.
 ப-ரை:--உண்ணுதற்கு முன்னும்-நீ ஒவ்வொரு வெளையிலும் சாப்பிடத் தொடங்குதற்கு முன்னரும், உதங்குதற்கு முன்னும் - நீ ஒவ்வோர் இரவும் சித்தி ரைக்குச் செல்வதற்கு முன்னரும், மெய்யை-மெய்ப்