பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௫-ம் அதி.–இரவு விலக்கல்.

இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல். ௧௪௧.
இரவினிற் றாழ்ந்ததொன் றிலையென மொழிப. ௧௪௨.
இரவினிற் களவு மேற்றமா மென்ப. ௧௪௩.
இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப. ௧௪௪.
இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப. ௧௪௫.
அவருரை யெல்லா மழியா வுண்மை. ௧௪௬.
இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே. ௧௪௭.
தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம். ௧௪௮.
பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம். ௧௪௯.
அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம். ௧௫0.

௧௬-ம் அதி.–மயக்குவ விலக்கல்.

மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள். ௧௫௧.
அவைகள் கஞ்சா வபின்முத லாயின. ௧௫௨.
அறிவுதம் முயிரே யாதியே யுலகே. ௧௫௩.
அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே. ௧௫௪.
அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர். ௧௫௫.
மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர். ௧௫௬.
மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம். ௧௫௭.
மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர். ௧௫௮.
வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும். ௧௫௯.
ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல். ௧௬0.


10