பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௨௭-ம் அதி.–ஒழுக்க முடைமை.

ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ௨௬௧.
அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். ௨௬௨.
அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். ௨௬௩.
இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். ௨௬௪.
நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல். ௨௬௫.
மறநெறி விலக்கி யறநெறி செல்லல். ௨௬௬.
தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல். ௨௬௭.
தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல். ௨௬௮.
பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல். ௨௬௯.
உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல். ௨௭0.

௨௮-ம் அதி.–அறிவுடைமை.

அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. ௨௭௧.
அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. ௨௭௨.
அறிவு பகைவரா லழிக்கப் படாதது. ௨௭௩.
அறிவினை யுடையா ரனைத்து முடையர். ௨௭௪.
அறிவில் லாதார் யாதுமில் லாதார். ௨௭௫.
அறிவிற் கறிகுறி யாவன செய்தல். ௨௭௬.
எளியவாச் செலவுரைத் தரியவை யுணர்தல். ௨௭௭.
பாவம் பழிக்குப் பயந்திவ ணொழுகல். ௨௭௮.
உலகினோ டென்று மொத்து நடத்தல். ௨௭௯.
எதிரதாக் காத்தெவ் வின்பமு மடைதல். ௨௮0.


16