பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௯௫-ம் அதி.–பகைமை.

பகைமை யென்ப திகலது முதிர்வு. ௯௪௧
பழமையின் மறுதலை பகைமையென் றறிக. ௯௪௨
பகைமையுட் கொடியதுட் பகைமையென் றறைப. ௯௪௩
அதனினுங் கொடியதிங் கரியவை கவர்வது. ௯௪௪
பகைமையை யுட்கொள றகைமையன் றென்ப. ௯௪௫
அதைவிடா தவர்பா லியாதிவண் செய்வது? ௯௪௬
அன்புபா ராட்டி யவரை வளர்ப்பதோ? ௯௪௭
ஈகையென் றவர்கரத் தின்னுயிர் விடுப்பதோ? ௯௪௮
அறமென வெண்ணித் துறவினைக் கொள்வதோ? ௯௪௯
தம்மா ருயிரைத் தாமழித் தொழிவதோ? ௯௫0

௯௬-ம் அதி.–பகையடு நெறி.

பகைமையை விடாரைப் பகைத்தடல் வழக்கு. ௯௫௧
பகையினை யடற்குப் பலபல நெறியுள. ௯௫௨
எதற்கும் பொருளறி வின்றியமை யாதவை. ௯௫௩
ஒல்லு மிடத்தெலாம் வெல்லு மமர்நலம். ௯௫௪
ஒல்லா விடத்தினி லுபாய முறைநலம். ௯௫௫
முறையின் சொல்லே கொடைபிரிப் பழிப்பே. ௯௫௬
முன்னைய விரண்டுந் தன்னினாம் வகைசெயல். ௯௫௭
பின்னைய விரண்டும் பெருந்துணை கொடுசெயல். ௯௫௮
உட்பகை யினரை யுட்பகைத் தடுக. ௯௫௯
ஒட்டிமேய் வாரை யொட்டிமேய்ந் தடுக. ௯௬0


50