அண்ணா சில நினைவுகள்/மாயூரம் மாநாடு மறக்கவொண்ணாதது

மாயூரம் மாநாடு மறக்கவொண்ணாதது!

“ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்று ஒரு பழமொழி மாயவரம் நகரில் மட்டும் வழங்கி வந்தது. இதைப் பழமொழி என்று சொல்வதைவிடப் புதுமொழி என்றே சொல்வது பொருந்தும். ஏனெனில் நீண்ட நாள் இந்தவூர் மாயவரம் என்றே அழைக்கப்பட்டது. அண்ணா என்னைப் பார்க்கும்போது “ஏன்யா, அது என்ன பெயர் மாயவரம் என்று? மாயமான வரமா அல்லது மாயவரமா” (மாய்வதற்கு வரமா?) என்று கேட்பதுண்டு. “இல்லை யண்ணா, மயிலாடுதுறை என்ற அழகான தமிழ்ச் சொல்லை, மயூரம் என்று பார்ப்பனர்கள் வடமொழிக்கு மாற்றி, இந்தவூர் சிவன் பெயரையும் மயூரநாதர் எனச் சூட்டிவிட்டனர். வேதாரண்யம் எப்படி வந்தது ஆரியர் சூழ்ச்சியால்? காடுகளில் வாழ்ந்தபோது பாடிய வேதங் களுக்கும் நம் தமிழகத்துக் காடுகட்கும் என்ன தொடர்பு? இதைச் சிந்திக்காமல், நம்மவர்களிலேயே சிலர் அதைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, திருமறைக்காடு என்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அங்குள்ள காடுகளில் இன்றும் மான்களும் மட்டக் குதிரைகளும் நிரம்ப உள்ளன. மரை என்றால் மான், மட்டக் குதிரை . இவற்றைத்தான் குறிக்கும். மரைக்காடு என்ற நியாயமான பெயரை எப்படி யெல்லாம் மாற்றி விட்டார்கள்!

காவிரிக் கரையையொட்டி ஆடுதுறை, திருஆடுதுறை உள்ளதுபோல மயில் ஆடுதுறை இருந்தது. இதற்காகப் போராடிப் போராடிச் சட்டமன்ற உறுப்பினர் கிட்டப்பா

முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல் வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும். ஆனால் சுவை மிகுதி. தண்ணிர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக் காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார்.

அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக் கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ் டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்!

தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி. படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன். அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே. வளைவுகள் வாசகங்கள் விளம்பரங்கள் செய்திருந்தேன். டெல்லியில் தபால் தந்தி துணைநிலை அமைச்சரான B. பகவதியும், உள்துறை துணையமைச்சரான திருமதி மரகதம் சந்திரசேகரும், அண்ணாவுடன் அளாவளாவி, சொற்பொழிவும் ஆற்றினர். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் S. R. பாஷ்யமும் பங்கேற்றார் இங்கே!

அப்போது சென்னை மாநில முதல்வர் காமராஜர். அவரை நான் ஒரு முறைதான் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த மாநாட்டுக்கு முந்திய மாதம் அவர் மாயூரம் வந்திருந்தபோது,என் தெருவிலுள்ள நகராட்சிப் பயணியர் விடுதியில் சந்தித்து, எமது மாநாட்டுக்கு வருமாறு அழைத் தேன். நிற்க வைத்துத்தான் பேசினார். “ஏதப்பா நேரம்?” என்றார். உங்கள் பெயரைப் போட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் வாருங்கள்! அண்ணா நிச்சயம் கலந்துகொள்வார்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் வரவில்லை!

பொதுக்கூட்டம் மிகமிகப் பிரம்மாண்டமாயிருந்தது; டெல்லி அமைச்சருக்கும், எங்கள் பொதுச் செயலாளருக் கும் புதுமையான அனுபவம். அஞ்சல் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுச் செயலாளராயிருந்து அறிவின் முத்திரையை இந்தியா முழுவதும் பொறித்துள்ள எங்கள் அண்ணன் A. S. ராஜன் M.A. அங்கு சொற்பொழிவாற்றினார்.

அண்ணாவின் பேருரையில், RMS ஊழியர்கள் ஒடுகின்ற வண்டிகளில் ஆடுகின்ற பெட்டிகளில் ஆடாமல் நின்றபடிக் கண்களை மூடாமல் பணியாற்றும் அவலமான நிலைமைகளைக் கவலையுடன் எடுத்துக் கூறி, பணியின் தரம் உயரவும், அஞ்சற் பிரிப்போரின் துயரம் குறையவும்: RMS Mail Vanகளை ஏர் கண்டிஷன் செய்யவேண்டும் என்று, மத்திய அரசுக்கு, அங்கு வந்துள்ள இரு அமைச்சர்கள் வாயிலாக எடுத்துரைத்து வாதாடினார்கள்,

என்னைப் பொறுத்தவரையில் மாநாட்டின் Climax என நான் எண்ணித் திட்டமிட்டுச் செய்துவந்த ஒன்று, அன்றிரவு மாணவர் விடுதித் திறந்தவெளியில், காவிரி யாற்றின் கரையோரத்தில் நடத்திய நிலாவொளி விருந்து. Moonlight dinner ஆகும். அண்ணாவுடன் நீங்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டு அருந்தி மகிழ வேண்டும்; எங்களைச் சிறப்பிக்க வேண்டும்! என்று சென்னையி லேயே கலைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவ்வாறே தஞ்சை மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அன்னார், இறுதியாகக் குத்தாலம் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து, விரைந்துவந்து, எங்களைப் பெருமைப் படுத்தினார். வட்ட வடிவத்தில் நாற்காலி மேசைகளை அமைத்து, எங்கள் ஊழியர்களும், சங்கத் தலைவர்களும் ஒருங்கே அமர்ந்து அண்ணாவுடனும் கலைஞருடனும் உரையாடி மகிழ்ந்து களித்தனர் நெடுநேரம்!

இந்த நிலவொளி விருந்து என் நினைவைவிட்டு நீங்காததால் 1973ல் பூம்புகாரில் முதலாவது சித்திரைப் பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக ஒரு நிலவொளி விருந்து நடத்தினேன். சித்திரான்னங்களுடன், மீன் குழம்பு மீன்வறுவலும் உண்டு. இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் தேனிசை செவிக்கு விருந்து.

இதுவரையில் எங்கள் மாநிலச் சங்கத்தின் பொறுப்பு களில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கி மறைந்த என்னைப் பிடிவாதமாக மாநிலச் சங்கத்தின் துணைத்தலைவராக இங்கு தேர்ந்தெடுத்தனர்.

அண்ணாவும் கலைஞரும் மயிலாடுதுறை மாநாட்டினின்று அப்போது விடைபெற்றனர். ஆயினும், மீண்டும் அழைக்கும்போது வருவதாக உறுதியளித்துச் சென்றனர், RMS சார்ட்டர் பெருமக்கள் காலமெல்லாம் இத்தகைய பெருமையினை எண்ணி எண்ணி, இன்னமும் பாராட்டி டிவகையில் மிதக்கின்றனர்.