பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

பன்னிரு திருமுறை வரலாறு


என்னும் குறுந்தொகைச் செய்யுளேத் தழுவியமைந்ததாகும். இதன்கண் தலைமகள் கண்ணினைக் கண்ணின் வலை எனக்குறித்த உருவகம்,

  • நுண்வலைப் பரதவர் மடமகள், கண் வலைப் படுஉம் (184) எனவரும் குறுந்தொகைத் தொடரில் அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்குதற்குரியதாகும்.

தலைமகனது குறையினை ஏற்றுக்கொண்ட தோழி, தலை மகளைக் குறை நயப்பிக்க வேண்டி வன்மொழியாற் கூறின் அவள் மனம் மெலியும் என்றஞ்சி, ஒரு நண்டு தன் பெடை நண்டுக்கு நாவற்பழத்தை நல்குதலைக்கண்டு ஒரு பெரியோன் பேய் பிடித்தாற்போல நின்ருன், அந்நிலையை நீ கண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய். யான் வன்னெஞ்ச முடையே தைலின் வருத்தமின்றி மீண்டேன்' என மென் மொழியோடு சிறிது வன்மொழியும் அமைய விரவிக் கூறுவது.

நீகண்டனை யெனின் வாழலை நேரிழை யம்பலத்தான் சேய்கண் டனையன் சென் ருங்கோ சலவன்றன்

சீர்ப்பெடையின் வாய்வண் டனையதொர் நாவற்கனி நனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் ருகி நின் ருனப் பெருந்தகையே (84) என்னும் திருக்கோவையாகும். இஃது,

அகலிலை நாவல் உண்டுறை யுதிர்த்த கணிகவின் சிதைய வாங்கிக் கொண்டு தன் தாழை வேரளை வீழ்துணைக் கிடு உம் அலவற் காட்டி நற்பாற் றிதுவென நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே (380) எனவரும் அகநானூற்றுப் பாடற்பொருளைத் தழுவி அமைந்ததாகும்.

புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வொழியப் போன ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் வனர் சுரியைம் பாலோய் வண்ணம் உண சேனல்

(சிலப்பதிகாரம் 7 - 31) எனவரும் கானல் வரிப்பாடல் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கதாகும்.

தலைமகளது நானுரைத்துக் கையுறை மறுத்த தோழி, " அவள் நாணம் ஒருபுறமிருக்கட்டும். குறக்குடியிற் பிறந்த