அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தாராள மனப்பான்மை


(91) தாராள னப்பான்மை



எந்தக் காரணத்திலாவது, ஒரு பத்திரிகையைப் படிக்காத சந்தாதாரர்கள், அந்தப் பத்திரிகையை நிறுத்தி விடுமாறு, பத்திரிகை அலுவலகத்துக்கு கடிதம் எழுதும் வழக்கம் அமெரிக்காவில் அதிகம். பெரும்பாலும் ஒவ்வொரு பத்திரிகைக்குமே அம்மாதிரிக் கடிதங்கள் வருவது உண்டாம்.

'கிறிஸ்தியன் ஸயின்ஸ் மானிட்டர்' என்ற பத்திரிகைக்கும் சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்தது.

"அன்புள்ள ஐயா,

ஒரு வருடத்துக்கு முன், தங்கள் பத்திரிகைக்கு நான் சந்தா செலுத்தினேன், ஒரு வருட முடிவில் எனக்குத் திருப்தி ஏற்படாவிட்டால், என்னுடைய சந்தாத் தொகையைத் திருப்பி விடுவதாக அப்போது நீங்கள் வாக்களித்தீர்கள், இப்பொழுது, அப்படியே அதைத் திரும்பப் பெற விரும்புகிறேன்.

"ஆனால், சற்று யோசித்துப் பார்த்த போது, உங்களுக்கு வீண் சிரமம் கொடுப்பானேன் என்று தோன்றியது. ஆகவே, அந்தத் தொகையை அடுத்த ஆண்டுச் சந்தாவுக்கு ஈடு செய்துகொள்வீர்களாக" என்று எனக்கு குறிப்பிட்டிருந்தார், அந்தக் கடிதத்தில்.