அறிவுக்கு உணவு/அறிவின் பயன்

அறிவின் பயன்

கடலின் ஆழமான இடத்து நீர் நீல நிறமாய்த் தோன்றும். ஆழம் குறைந்த இடத்து நீர் பச்சை நிறமாய்த் தோன்றும். அலைநீர் முத்தைப்போன்று வெள்ளை நிறமாய்த் தோன்றும். அள்ளிப் பார்த்தால், நிறமற்றுத் தோன்றும். உண்மை, என்னவெனில், நீருக்கு நிறமில்லை என்பதே. இதைக் கண்டுபிடித்து மகிழ்வதுதான் ஆராய்ச்சி அறிவின் செயலாகும். இதை அறிந்துதான் வள்ளுவர், “எந்தப் பொருள் எப்படித் தோன்றினாலும், நம்பாதே; அப்பொருளின் மெய்ப்பொருளைத் தேடிக் காண்பதுதான் அறிவு” எனக் கூறினார் போலும்!