இலக்கிய பஞ்சகம்

கவிமணியின் கவிமலர்கள் தொகு

ஆசிரியர்: கவிமணி தொகு

இலக்கியப் பஞ்சகம் தொகு

1. வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்

மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - நூலின்
உத்தம ராகி ஒழுகுவமே.

2. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்

பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
நன்னயம் முற்றுந் தெளிகுவமே.

3. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதிகாரம் அதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே.

4. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்பக்

கற்பனை சேருங் களஞ்சியத்தை
முற்ற அளந்து தெரிவோமே - காதல்
மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.

5. பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப்

பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து
மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்
வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.


கவிமணியின் கவிமலர்கள் தொகு

பார்க்க
"https://ta.wikisource.org/w/index.php?title=இலக்கிய_பஞ்சகம்&oldid=444565" இலிருந்து மீள்விக்கப்பட்டது