உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஏழு கன்னியர் வருகை

உறந்தை வளநாட்டில் குரும்பீசர் தோட்டத்தில்
வருந்தூது வண்டுகள் அரும்பும லர்ந்திட
நல்ல மலர்களுண்டு தென்னுறந்தை நன்னாட்டில்
உன்னத மாகவேழு கன்னியர்கள் வந்ததும்
மலரெல்லாம் கொய்துதிரு முடிமே லணிந்ததும் (155)
நலியாமல் கன்னியர்கள் தளிகைநீ ராடியே
ஆடிப் புடைவைதுகி லாடை யணிந்ததும்
ஓடிநூ லேணிவழி யாகநடந்ததும்
சப்தகன் னிகள்வந்து நித்தமலர் கொய்ததும்