உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தாராவின் முறையீடு

ஆராய்ந்து கொள்வது, நாரைஅ டைவதும்
தாராவின் முட்டைரசம் நீர்மேல் மிதப்பதும்
தாரா முறையிடுவ தேதென்றார் நாட்டார்கள்
வாரி யெழுந்திருந்து ஏரியில் வந்தார்கள்
தாராவின் முட்டையிலே சேதங்கள் போகாமல்
காராள ரையழைத்துக் கலிங்குதி றவென்றார்
கலிங்குதி றக்கவென்றால் குரும்பர் வரவேணும்
காணிக் குரும்பருந்தே ராணிக்கக் காரராம்
வந்துக தவும்ம தகும்தி றந்தார்கள்
சென்றோடிக் கெங்கைசி றந்தத ளிகையும்
குண்டுக ளந்தண்கு ளங்கள்குட் டையெல்லாம்
கண்டு விட்டராசன் கடலோடிப் பாய்ந்ததும்
கடலில் இருந்தசிப்பி எதிராக வந்ததும்
நிலைபார்ப்போம் என்றுவீர மணவாளர் சொன்னதும்
வலைகாரர் என்றுசொல்லி வாளைகு திப்பதும்
சிலைராமர் வாராரென்று சேல்கள்ப ரந்ததும்
பதறாதே யென்றுவீர மணவாளர் சொன்னதும்
சேலும்க யலும்சி றந்தவ ளநாடு