உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாழ்த்து

திருக்காக் குரும்பருடன் தேவிபெரியவள்
தழுக்கை விநாயகரும் சரஸ்வதியும் வாழியே!
இந்திரர் கோத்திரங்கள் எந்நாளும் வாழியே!
மலையாள் பரங்கிமுத்து மாரிமிக வாழியே!
சிலைராம ருந்தனுசு சீதைமிக வாழியே
மாதம் மும்மாரிம ழைகள் பொழிந்திட
வீரமண வாளர்கள் மேன்மேலும் வாழியே!
அளவிலாச் செம்பொன் அளகா புரிதனில்
துளசி மகாராசர் ஆல்போல் தழைத்திட
துலங்கும் புகழுறந்தை சுந்தரம் வாழியே!
இலங்குமார்க் கண்டர்போல் இலங்காவி வாழியே!
சிங்கார மாயர்கள் செட்டிபல வட்டரைகள்
எல்லாச்சி வாலயங்கள் எந்நாளும் வாழியே!
துன்னிய கீதம்து லங்கும்உ றந்தையில்
பண்ணும் தமிழும் பணிக்கலங்கள் வாழியே!