17  முந்துற்றோம் யாண்டும்!

செந்தமிழே! உள்ளுயிரே;
செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வா
றெடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும்
முகிழ்த்த இலக்கியமும்
விந்தை ‘ நெடுநிலைப்பும்
வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப
வுள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக்
குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும்
அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும்
முழங்கத் தனித்தமிழே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/020-089&oldid=1514507" இலிருந்து மீள்விக்கப்பட்டது