31  தமிழ் படித்தால் வாழ்வு புதுமைபெறும்!

அறம் பெருகும் தமிழ் படித்தால்;
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும்; உரம் பெருகும்;
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும்; ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்!
புதுமை பெறும் வாழ்வே!

-1967

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/034-089&oldid=1514521" இலிருந்து மீள்விக்கப்பட்டது