கலிங்கத்துப் பரணி/கடவுள் வாழ்த்து

உமாபதி துதி தொகு

1.

புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்
செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்
புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம் . 1

2.

அருமறையி னெறிகாட்ட வயன்பயந்த
நிலமகளை யண்டங் காக்கும்
உரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோத்
தமனபயன் வாழ்க வென்றே. 2

திருமால் துதி தொகு

3.

ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்குந்
திருவயிற்றிற் றொருகுழவி திருநாமம் பரவுதுமே. 3

4.

அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகை
இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. 4

நான்முகன் துதி தொகு

5.

உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்கு
முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. 5

6.

நிலநான்குந் திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்
குலநான்குங் காத்தளிக்குங் குலதீபன் வாழ்கவென்றே. 6


சூரியன் துதி தொகு

7.

பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க
ஓராழி தனைநடத்து மொண்சுடரைப் பரவுதுமே. 7

8.

பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத்
தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. 8

கணபதி துதி தொகு

9.

காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்
கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்
டாரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும்
ஐங்கரத்த தொருகளிற்றுக் கன்பு செய்வாம். 9

10.

தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்
சயத்தம்பம் பலநாட்டி யொருகூ டத்தே
அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும்
அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க வென்றே. 10

முருகவேள் துதி தொகு

11.

பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்
பன்னிரண்டு மாறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். 11

12.

ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந் தொருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்
ஈரிரண்டு படைத்துடைய விரவிகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. 12


நாமகள் துதி தொகு

13.

பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயரத் திருப்ப ளென்று
நாமாதுங் கலைமாது மென்னச் சென்னி நாவகத்து ளிருப்பாளை நவிலு வாமே. 13

14.

எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போல
மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. 14


உமையவள் துதி தொகு

15.

செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்
தெய்வமுத னாயகனை யெய்தசிலை மாரன்
கையின்மலர் பாதமலர் மீதுமணு காநங்
கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம். 15

16.

கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்
கார்முகம்வ ளைத்துதியர் கோமகன்மு டிக்கட்
பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
பூழியர்பி ரானபயன் வாழ்கவினி தென்றே. 16


சத்த மாதர்கள் துதி தொகு

17.

மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடைச்
சோதி மென்கொடிக ளேழி னேழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே. 17

18.

கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே. 18

வாழி தொகு

19.

விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலி னுயிர்நிலை பெறுகவே. 19

20.

தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி வளர்கவே
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி கவிகையும் வளர்கவே. 20