கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/3 கலீலியோ காலத்து மக்கள் மனநிலைகள்

3 கலீலியோ காலத்து மக்கள் மனநிலைகள்

இந்தச் சூழ்நிலையில், கலீலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொண்டால்தான், எதிர்கால மக்களாகிய நாம் அவரது கண்டுபிடிப்புகளை எவ்வாறு புரிந்து கொன்டு வாழ்ந்து வருகிறோம் என்பதையும் அறிந்தவர்கள் ஆவோம்!

அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள், உலக வடிவத்தைப் பற்றியும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் சரியாகப் புரிந்து கோள்ளாதவர்களாகவே இருந்தார்கள்.

ஒரு காலத்தில் சூரிய கிரகணத்தைக் கண்ட ஐரோப்பிய மக்கள், கிணறு, குளங்கனை எல்லா மூடி விட்டார்கள். ஏதோ ஒரு வித விஷம் தண்ணீரில் கலந்து விடும் என்பது அவர்களிடையே எழுந்த அச்சமாக இருந்தது.

இப்போது கூட, தற்காலமக்கள் சூரிய கிரகணம் வருகின்ற போது, அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பாண்டங்களிலே எல்லாம் தர்ப்பைப் புல்லைத் துண்டு துண்டாக நறுக்கி அந்தப் பாத்திரங்களிலே போட்டு வைப்பதை நாம் இன்றும் பார்க்கிறோமே-ஏன்?

பண்டைய கால மக்கள் கிணறு, குளங்களிலே உள்ள தண்ணீரில் விஷம் கலந்து விடும் என்று எவ்வாறு அச்சப் பட்டனரோ, அதே அச்சம்தான்் இப்போதுள்ள மக்கள் இடையேயும் அந்த மூடநம்பிக்கை தொடர்ந்து இருக்கின்றது என்பதல்லவா பொருள்?

பழைய கால பெரூவியர்கள், தங்கள் நாய்களை அடித்து ஊளையிட வைப்பதன் மூலம் சூரியன் விழுங்க வரும் கொடிய பேய், பிசாசுகளைப் பயந்து ஓடச் செய்வதாக அவர்கள் நம்பினார்கள்.

ரோம் நாட்டு மக்கள், தாரைத் தப்பட்டைகளை அடித்து பெரிய ஓசைகளை எழுப்பி, தீவட்டி ஜோதி போல நெருப்புப் பந்தங்கனைக் கொளுத்தி அந்தப் பிசாசுகளை விரட்டினார்களாம்!

வட ஐரோப்பா நாடுகளிலே வாழ்ந்த மக்கள் ; இரண்டு கொடிய ஓநாய்கள் சூரியனை விழுங்க வருவதாக எண்ணி, பேரிரைச்சலிட்டு, அந்த விலங்குகளைத் துரத்தி யடித்தார்கள்.

வேறு சிலநாடுகள் தப்பட்டைகள் அடித்தும், கொம்புகள், சங்குகள் ஊதியும், ஓவென்று அந்த மக்கள் அலறிக் கூச்சலிட்டும், வெறியாட்டங்களை விருப்பம்போல் ஆடியும்-பாடியும், தண்ணீர் நிரம்பியுள்ள குளங்கள் ஏரிகளில் குதித்தும் வழிபாடுகளைச் செய்து சூரியனைக் காப்பாற்றினார்கள்.

கிரேக்க நாட்டு மக்கள்; 'ஜூபீடர்' என்ற கடவுள் நங்களது நடவடிக்கைகளைப் பிற கடவுள்கள் காணக் கூடாது என்பதற்காக சூரியனை ஒரு திரையால் மறைத்து உலகை இருட்டாக்கிவட்டார். என்று நினைத்து அவர்கள் நம்பினர்.

இந்திய மக்களும் சீன நாட்டு மக்களும் கேது என்ற கிரகமான பாம்பு சூரியனை விழுங்குவதாக நினைத்துக் கொண்டு இருப்பதை இன்றும் நாம் பார்த்து வருகிறோம்.

இவ்வளவு மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள இந்த உலகத்தில், இந்தியா, எகிப்து, பாபிலோனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த வாணியல் வித்தகர்கள், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவைகளைப் பற்றிய உண்மைகளை அந்தந்த காலங்களில் கண்டுபிடித்து கூறினர்.

பழைய காலத்தில் வாழ்த்த மக்கள், நாம் வாழும் பூமி சலனமற்று நிற்பதாக நம்பினார்கள். சூரிய சந்திரர்களும், மற்ற பிற கோள்களும் விண்மீன்களும், நாள் தோறும், நாம் வாழும் பூமியையே சுற்றிச் சுற்றி வலம் வருவதாக நம்பி வந்தார்கள்.

இந்தக் கருத்து வானியல் இயக்க உண்மைகளுக்கு நேர்விரோதமானது என்கிற உண்மையை தாம் இன்று படித்தும் கேட்டும் வருகிறோம்,

ஒரு காலத்தில், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்களும் வானவியல் பரப்பில் உலவி வருகின்றன் என்றும், மற்ற தோள்கள் எல்லாம் சலனம் இல்லாமல் அப்படியே நிற்கின்றன என்றும் அக் காலத்து மக்கள் நம்பினார்கள்.

ஆனால், இன்று பூமி உள்ளிட்ட கோள்கள் எல்லாமே வானவெளியில் பவனி வந்து கொண்டிருக்கின்றன என்று நாம் ஆறிவோம்.

அன்றைய மக்கள் வானவெளியில் காணப்படும் கோள்கள் எல்லாம் எந்தெந்தப் பொருட்களால் ஆக்கப் பட்டவை, எதனால் இப்படி இயங்குகின்றன? எந்த வழியில் சுற்றுகின்றன? உலகம் என்பது என்ன? சூரியன் நட்சத்திரங்கள் இவற்றின் பிறப்பு வளர்ப்பு என்ன? என்ன போன்ற உண்மைகளை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

இன்றைய தினம் நாமோ, அவைகள் சூரியனுடைய சக்தியால் கவரப்பட்டு, அவை எல்லாமே வான் வெளியில் தம் விருப்பபடி ஓடிப்போகாமல், ஒரு குறிப்பிட்ட ஓடு பாதை வழியாகவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன் என்றும், நம் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் நாம் அறிகின்றோம்.

தங்களது சாதாரணக் கண்களையே நபிேயப் பழங்கல மக்கள்! விண்மீன்கதைக் கண்டு தெரிந்து கொண்டார்கள்.

ஒருவர் தனது ஆண்களின் சாதாரண பார்வையால் சுமார் ஐயாயிரம் விண்மீன்களை மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால், இன்று அடிப்படியல்ல.