கலைக்களஞ்சியம்/அகண்ட காவிரி

அகண்ட காவிரி : மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை யடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி யருகில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும்.