கலைக்களஞ்சியம்/அக்குரன்

அக்குரன் இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது.