கலைக்களஞ்சியம்/அந்திரோகிலீசு

அந்திரோகிலீசு ஒரு ரோம நாட்டு அடிமை, தன் எசமானிடமிருந்து தப்பித்து ஓடிப்போய் ஒரு குகையுள்ளே ஒளிந்துகொண்டான்; அங்கு வருந்திக் கொண்டிருந்த ஒரு சிங்கத்தின் பாதத்தில் தைத்திருந்த முள்ளை எடுத்துவிட்டான். பிறகு இவன் பிடிபட்டு, ஒரு சிங்கத்துடன் போர் புரியும்படி தண்டிக்கப்பட்டான். ஆனால் போர் புரிய வந்த சிங்கம் இவனே தன் துன்பத்தை நீக்கியவன் என்று அறிந்து, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல் இருந்தது. இது பண்டைய ரோமக் கதைகளில் ஒன்று.