கலைக்களஞ்சியம்/அனந்தாச்சார்லு

அனந்தாச்சார்லு (1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வொக்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908