கலைக்களஞ்சியம்/அனேகதங்காபதம்

அனேகதங்காபதம் வடநாட்டிலுள்ள சிவஸ்தலங்களில் ஒன்று. இங்குக் கெளரி தவம் செய்ததாக ஐதீகம். இதற்குக் கௌரிகுண்டம் என்றும் பெயருண்டு. இங்குச் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வழிபட்டனர். சுவாமி அருண்மன்னேசுரர்;

அம்மை மனோன்மணி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.