கலைக்களஞ்சியம்/அன்பில் ஆலந்துறை

அன்பில் ஆலந்துறை: திருச்சிராப்பள்ளி ஜில்லா, லால்குடி புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3 மைலில் கொள்ளிடத்துக்கு வடகரையில் உள்ளது. இது கீழ்அன்பில் எனவும் வழங்கும். பிரமன் முதலியோர் வழிபட்ட இடம். வாகீச முனிவர் பூசித்த தலம். கொள்ளிடத்துக்குத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தரும் அப்பர் சுவாமிகளும் பாடிய பாடல்களைக் கேட்ட இவ்வூர்க் கோவிலின் சுற்றின் தென்மேற்கில் உள்ள விநாயகருக்குச் செவிசாய்த்த விநாயகர் என்று பெயர். சுவாமி சத்தியவாகீசுரர். அம்மன் செளந்தரநாயகி. கொள்ளிட நதி தீர்த்தம்.