கலைக்களஞ்சியம்/அம்பாய்னா

அம்பாய்னா (Amboina) கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள மொலுக்காசில் ஒரு மாவட்டமும் அதன் தலை நகரமும் ஆகும். இம்மாவட்டம் அம்பாய்னா, சபாருவா, செராம் போன்ற சில தீவுகளால் ஆனது. பரப்பு 75,820 ச. மைல், மக்: சு. 4 லட்சம். இலவங்கம், சாதிக்காய் முதலிய பொருள்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன.அம்பாய்னாநகரம் ஒருநல்ல துறைமுகம். 1521-ல் இத்தீவுகளில் போர்ச்சுக்கேசியர் குடியேறினர். 1600-ல் டச்சுக்காரர் இவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். 1615-ல் ஆங்கிலேயரும் அம்பாய்னாத் தீவின் மறு முனையில் குடியேறினர். டச்சுக்காரர் இவர்களைச் சுதேசிகளைக் கலகஞ் செய்யத் தூண்டினர் என்று குற்றம் சாட்டி, 1623-ல் கொன்றுவிட்டனர். 1942-ல் ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் வந்த இப் பிரதேசம் யுத்தத்தின் முடிவில் மீண்டும் டச்சு ஆதிக்கத்தின்கீழ் வந்தது. 1950-ல் தோனீசியக் குடியரசு நிறுவப்பட்ட போது அம்பாய்னா அதன் ஆளுகையின்கீழ் வந்தது.