கலைக்களஞ்சியம்/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இமயவரம் பன் நெடுஞ்சேரலாதனுடைய இரண்டாவது மகன். தண்டகாரணியமென்னும் ஓரிடத்திலே வடநாட்டவரால் கவரப்பட்ட பசு நிரைகளை மீட்டுத் தொண்டியில் சேர்ப்பித்ததால் இப்பெயர் பெற்றான். தன்னைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் ஈந்தவன் (பதிற். ஆறாம் பத்து).