கலைக்களஞ்சியம்/ஆடுதுறை மாசாத்தனார்

ஆடுதுறை மாசாத்தனார் சங்ககாலப் புலவர். காவிரியாற்றின் வடக்கிலொன்றும் தெற்கிலொன்றும் வட வெள்ளாற்றங்கரையிலொன்றும் ஆக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயருடன் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றில் இருந்த புலவர் இவர். சாத்தன் என்னும் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர். இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தபோது வருந்திப் பாடியுள்ளார் (புறம். 227).